Wednesday, November 16, 2005

வழி தெரியவில்லை



















போவதற்கு கால்கள் இருந்தும்
எத்தனையோ வழிகள் இருந்தும்
உரிமைகள் இருந்தும்
போக முடியாமல் இருக்கிறேனே
இது ஏன்.....??????

பேசுவதற்கு வாய் இருந்தும்
வார்த்தைகள் இருந்தும்
உரிமை இருந்தும்
பேச முடியாமல் இருக்கிறேனே
இது ஏன்.....??????

பார்ப்பதற்கு கண்கள் இருந்தும்
பல நிற வானவில் இருந்தும்
உரிமைகள் இருந்தும்
பார்க்க முடியாமல் இருக்கிறேனே
இது ஏன்.....??????

கேட்பதற்கு இரு காதுகள் இருந்தும்
எத்தனையோ செய்திகள் இருந்தும்
உரிமைகள் இருந்தும்
கேட்க முடியாமல் இருக்கிறேனே
இது ஏன்..... ??????

வாழ்வதற்கு வாழ்க்கை இருந்தும்
எத்தனையோ வழிகள் இருந்தும்
உரிமைகள் இருந்தும்
வாழ முடியாமல் இருக்கிறேனே
இது ஏன்??????

எல்லாம் உன்மேல் வைத்த அன்பினால் தான்
இன்று நான் என்னை இழந்து நிக்கிறேன்
ஒரு நிமிடம் என்னை நீ நினைத்துப்பார்
அப்போது தெரியும் என் நிலை உனக்கு.

6 Comments:

Blogger U.P.Tharsan said...

அம்மாடியே!! எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. :-))

10:01 PM  
Blogger சிந்து said...

வணக்கம் உ.பி.தர்சன்.
என்ன உங்களுக்கு விளங்க வில்லை?
நன்றி.

10:09 PM  
Blogger சினேகிதி said...

ean endu ungaluku therium thane sinthu

1:57 AM  
Blogger சிங். செயகுமார். said...

வந்துட்டேன்!
இன்றுதான் கன்டேன் உன்
இனிய மடல்
இனியேல்லாம் வசந்தமே
துனிவோடு இரு
இனி செய்வோம் ஓர் உலகு!

2:57 PM  
Blogger றெனிநிமல் said...

வாழ்த்துக்கள் சிந்து.

தொடர்ந்து எழுதுங்கள்.

11:30 AM  
Blogger சிந்து said...

நன்றி றெனிநிமல், சிங். செயகுமார்.

11:38 PM  

Post a Comment

<< Home