Wednesday, March 01, 2006

நீ அறிந்ததில்லை




ஆடவனே
உன்னை மறக்கத்தான்
நினக்கின்றேன்
முடிய வில்லை

என்னை
அறியாமல் உன்
நினைவுகள் என்னை
வதைக்கின்றது

நீதான்
என் உலகம்
என்று இன்றுவரை
உன்னை நினைத்து நான்

உன்
நிழலை தேடி
என் கண்கள்
அலைமோதுகிறது

உன்
குரலை தேடி
என் செவிமடல்கள்
தவிக்கின்றது

உன்
நெஞ்சில் என்
முகம் புதைத்து
அழவேண்டும்

உன்
தோழில் என்
கரம் பற்றி
தொங்கவேண்டும்

என்
இனியவா உன்னைச்
சுற்றியல்லவா
என் உலகம் சுழல்கிறது
அறிவாயா நீ??

நான்
அழுகின்ற ஒவ்வொரு
வினாடியும் எனக்குள்
இருக்கும் நீ ஈரமாகின்ற
வேதனை அறிவாயா??


http://www.thamilworld.com/forum/index.php?showtopic=4111

0 Comments:

Post a Comment

<< Home