Tuesday, February 07, 2006

என் காதலன்

எனக்குள்ளும் காதல்
வந்தது
புரியா வயதில்
கொஞ்சும் மொழி
பேசிய போது
என்
கண்ணில் மலர்ந்தது
அன்று நீ
என் கை கோர்த்த போது
முளைத்த சந்தோசத்தில்

மனதார பேசி
மனங்கொண்டு பேசி
மனசுக்கு இனிமை காட்டி
மனப்பூட்டு பூட்டி
மனதை தடவி
மனதை மூடி
மனசார உன் கரம் நீட்டினாய்

ஆண் மகனாய்
ஆதவனாய்
ஆண் நீ
ஆசையாய் வளர்க்கப்பட்டாய்
ஆதரவாய் எனக்கு
எனக்காக படைத்த உன்
தாயிடம் தவறாமல் கூறு
தவப் புதல்வனை
தக்க சமயம்
பாரில் தவளவிட்டமைக்கு.

உன் இதயத்தை
எனக்காக
உரு மாற்றி தந்தாய்
என் கனவுகளின்
அர்த்தத்தை
புரிய வைத்தாய்

என்னோடு நீ
இருக்கும் வரை
வானம் கூட என்
கை வசம் தான்
உன்
சுவாசத்தில் தான்
என் இறுதி மரணமும்.

நேசமுடன்
சிந்து........

2 Comments:

Blogger றெனிநிமல் said...

இளமைக்கு காதல் கசக்குமா என்ன?

7:26 PM  
Blogger நாகராஜ் said...

நல்ல கவிதை.....அன்பரே

தொடர்ந்து எழுதுங்கள்

3:48 AM  

Post a Comment

<< Home