Friday, February 03, 2006

மனவருத்தம்



தண்ணீரில் மீனழுதால்
அதன் கண்ணீரை
யார் அறிவார்?

நான்கு சுவரினுள்
நறுமணம் வீசினால்
அதன் மணத்தை
யார் அறிவார்?

மூடிய சிற்பியினுள்
முத்திருந்தால் அதன்
பெருமையினை
யார் அறிவார்?

மனதிலுள்ள
புழுக்கங்களையும்
கவலைகளையும்
மூடிவைத்தால்
அதை யார் அறிவார்?

1 Comments:

Blogger J S Gnanasekar said...

//தண்ணீரில் மீனழுதால்
அதன் கண்ணீரை
யார் அறிவார்?//

உண்மைதான். யாரும் அறியார். ஆனால்,

"தண்ணியில மீனழுதா - கரையில
யாருக்கும் தெரிவதில்ல"
என்ற 'சங்கமம்' படப்பாடலைப் பலர் அறிவார்.

புழுக்கம், கவலை - என்ன வித்தியாசம்?

-ஞானசேகர்

11:28 AM  

Post a Comment

<< Home