Wednesday, March 01, 2006

கேட்டுப்பார்...




இதே இதே
தடங்கள் பதித்த
மணலில் தான்
உன்னை நான்
முதல் முதல் கண்டேன்

அந்த அந்த
மணல் சூட்டில்
என் இழமையும்
புதையும் என்று
நான் அறியேன் அன்பே

தேடி தேடி
வாழ்க்கை முழுவதும்
நான் தேடியது
கிடைக்காமல் என்
பாதங்கள் தேய்ந்ததுதான் மிச்சம்

அந்த அந்த
நீலவானம் தொட
நான் நினைத்ததில்லை
உன் நிழல் தொட
ஏங்கினேன் துடித்தேன் தவித்தேன்

ஒரு கணம் ஒரு கணம்
நின்று கேட்டுப்பார்
ஓசையின்றி தேய்ந்துபோன
என் பாதங்களின் ஓசை
உன் காதில் ஒலிக்கும்
.......

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=4090

1 Comments:

Blogger சினேகிதி said...

"என் இழமையும்"
"இழமை" appidi oru sollu iruka sinthu? allathu matra "LLa" varuma?
Kavithai nalla iruku.Niraya elluthriyal.......nan vasikathathu niraya iruku.

7:06 PM  

Post a Comment

<< Home