Wednesday, November 30, 2005

தொலைந்தான் எதிரி

எதிரி தானே வந்தான் போருக்கு -நம்
வீரர் கூட்டம் வேறுங்கே யாருக்கு?
போனால் கிடைக்கும் போரில்
அந்த எதிரியின் ஈரல்!

போர்க்களத்தில் எதிரிக்கு எக்காளம் - உடன்
புறப்படட்டும் அங்கே வீரர் பட்டாளம்
பார்க்கட்டும் அக் கொதுகு- நன்றாய்ப்
பழுக்கட்டும் அவன் முதுகு

எதிரிக்கு இங்கென்ன வேலை -நம் வீரர்
படை கிழிக்கட்டும் அவன் தோழை
தானாகவே வந்தான் கொழுத்து! -அவன்
தன் தலை இழந்தது கழுத்து!

தேனாய்ப் பேசித் திடீரென்று பாய்ந்தான் - நம்
வீரர்படை கண்டு மனம் ஓய்ந்தான்
எதிரி இனி இல்லை
இனிப் போனதவன் தொல்லை!

நாடுபிடிக்க எதிரி செய்த வஞ்சகம் - மிக
நன்றாக தெரிந்தது வையகம்
கோடு தாண்டப் பார்த்தால் - தன்
கொடியோடு எரிந்தே போவான்!

1 Comments:

Blogger றெனிநிமல் said...

நன்றி சிந்து.

எதிரிகளை வேட்டையாடி மகிழ்ந்தவர்கள் தானே எம் முன்னோர்கள்.

7:22 PM  

Post a Comment

<< Home