Saturday, November 26, 2005

மாவீரர்கள்

முடிவிலிப் போருக்கு
முற்றுப்புள்ளி வைப்பதற்கு
முயன்று - வாழ்வில்
முற்றுப்பெற அனுபவிக்காமல்
முடிந்து போனவர்கள் நீங்கள்
முட்களுடன்
முட்டி மோதி
முதன்மையானவர்கள் நீங்கள்

மண்ணில் வந்த
மண்புழுக்கள் - எந்நேரமும்
மண்ணுடன் உறவாடும்.

அதுபோல.....
மானமுடன் வாழ்ந்த
மனிதன்
மானமுடன்
மரணிக்க நினைப்பது தப்பல்ல!

மலரினுள்
மறைந்திருக்கும்
மகரந்தத்தின்
மகிமையை

உலகிற்கே உணர்த்திடும்
வண்டுகள் போல் அல்லவோ
நீங்கள்

மாவீரர்களே உங்கள் பெருமையை.....
மரணத்தின் வாயிலில்
உணர்த்தி விட்டீர்கள்...
எமக்கு!

எங்கள் உயிரை காக்க
உங்கள் உயிரை இம்மண்ணில்
புதைத்தீர்கள்!

4 Comments:

Blogger பிருந்தன் said...

ந்ல்ல கவிதை வாழ்த்துக்கள்.

3:16 AM  
Blogger றெனிநிமல் said...

This comment has been removed by a blog administrator.

10:58 AM  
Blogger றெனிநிமல் said...

வாழ்த்துக்கள் சிந்து.

இவர்கள் போற்றப்பட வேண்டியவர்கள்.
கார்த்திகை 26ம் நாள் கவிதையை இணைத்திருக்கின்றீர்கள். நன்றி.

10:58 AM  
Blogger சிந்து said...

நன்றி பிருந்தன், றெனிநிமல். இனைந்திருங்கள்.

11:36 PM  

Post a Comment

<< Home