Friday, December 02, 2005

காதல் விண்ணப்பம்..............




















எனக்கு உன் மடி வேண்டாம்
உன் கால் பட்ட
மண் போதும்..

எனக்கு உன் அன்பு வேண்டாம்
வெறுப்பு போது அந்த வெறுப்பிலும்
என்னால் வாழ்ந்து காட்ட முடியும்

உன் பாசம் வேண்டாம்
நீ என்னை பார்த்த பார்வை
போதும்..

உன் மாடமாளிகை வேண்டாம்
நீ நின்ற நிழல்
போதும் ..

உன் பூந்தோட்டம் வேண்டாம்
உன் அருகாமை
போதும் ..

உன் சுவாசம் கூட வேண்டாம்
உன் இதயத்தில் பட்ட என் விம்பம்
போது..

காதலனே நீ கூட வேண்டாம்
உன்னை நினைத்திருந்த
உன் நினைவு போதும்..

1 Comments:

Blogger றெனிநிமல் said...

வாழ்த்துக்கள் சிந்து.

கிடைக்காமல் போன காதலையும் கூட, நேசிக்கின்றாய்.

7:24 PM  

Post a Comment

<< Home