Saturday, December 03, 2005

இயற்கை















இலைகளோடு
ஊடல் கொள்ளும்
காற்று

இன்பம்
பொங்கி வரும்
சூரியக் கதிர்

போருக்கு
புறப்படும்
இடி மின்னல்

எங்களையும்
ஒருதடவை பாருங்கள் என்று
கண்சிமிட்டும் நட்சத்திரங்கள்

பூமித்தாயை
குளிரூட்ட
கண்ணீர் சிந்தும் மேகங்கள்

நான் மலர்ந்தால்
வையகமே மலரும் என்று
சொல்லும் மலர்க் கூட்டம்

நடுநிசியிலும் என் பின்னே
வாருங்கள் என்று அழைக்கும்
அழகு நிலா

எண்ணிப் பாருங்கள்...
மனதுக்கு
குளிர்ச்சி தரும்
பசுமைக்கு மத்தியில்
எம்மை!

2 Comments:

Blogger றெனிநிமல் said...

நன்றி சிந்து.

இயற்கை அன்னைக்கு சேலை கட்டி அழகு பார்க்கின்றாய்!

7:30 PM  
Blogger சிந்து said...

நன்றி றெனி நிமல். தொடர்ந்து இனைந்திருங்கள்.

3:21 PM  

Post a Comment

<< Home