Friday, December 23, 2005

குழந்தையின் முகாரி...



இல்லறம்

எனும் பூங்காவில்

இனிக்கின்ற பூ மாலை

காதல்

எனும் கடலில்

கண்டடுத்த முத்து மாலை

உனக்கும்

எனக்கும் இடையே

தோன்றிய நினைவுச் சின்னம்

நம்

பாசத்தின் எல்லையில்

உதித்த மொத்த வரவு

இறைவனின்

அருள் விம்பத்தில்

கருணையின் முழு வடிவங்கள்

மொத்தத்தில்

நடமாடும்

பூஞ்சோலைகள்.

0 Comments:

Post a Comment

<< Home