Sunday, January 01, 2006

புது வருடத்திற்கு ஓர் மனு..............


புத்தாண்டே
நீயும் வருடந்தோறும்
வந்து கொண்டுதான்
இருக்கிறாய்

உருவம்
இல்லா உனக்கு
வண்ண வண்ண
மத்தாப்பு என்ன?

சீறி
எரியும் சீறு வாணம்
என்ன?

பூமித் தாயை
அதிர வைக்கும்
பட்டாசு என்ன?

உருவம் தெரியா உன்னை
அளவில்லா மகிழ்வோடு
உருவம் உள்ள ஜீவன்கள்
வரவேற்பு மாலை சூடுகிறார்

உயிர் இருந்தும்
உருவம் இருந்தும்
உடையின்றி
உணவுன்றி
உடைந்து கிடக்கும்
மனிதரை வரவேற்க
யார் உள்ளார்?

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=3927

2 Comments:

Blogger றெனிநிமல் said...

புது வருடம்! ஆனால் நினைவுகள் எல்லாம் பழைய வருடங்கள்.

8:36 PM  
Blogger சிந்து said...

நன்றி றெனி.

10:59 PM  

Post a Comment

<< Home