Sunday, January 01, 2006

சொல்லத் துடிக்குது மனசு......




சில நேரம் நான்
துள்ளி சிரிப்பது
வேடிக்கையாய்
இருக்கிறதா உனக்கு?

எண்ணித்தான்
பார்க்கிறேன் சகோதரியே........
எனக்குள் இருக்கும் ஏக்கங்களை

தேக்கி வைத்த காரணத்தை
சொல்லத்தான் துடிக்கிறேன்
துணிந்து சொல்லிடவா!
தூய்மையாய் எம் உறவில் ஏனென்று

நீண்டநேரம் விழியுறங்காமல்,
நிலைகுலைந்து விழிவீங்கி,
இரவினில் விழி கசிந்ததால்
யாருக்கு தெரியும் என் சோகம்

பல நாள் வாய் புலம்பி
என் நிழலில் மடிந்து சரிந்தேன்!
இரக்கமில்லாத என் பிறப்பால்
நீயும் நானும் ஓர் மடியில்
தான் தவழ்ந்தோம்

உனக்கு ஐந்து வயதுவரை
கிடைத்த பால்
எனக்குக் கிடைக்க வில்லையம்மா
அதுதான் உனக்கு ரோசம் அதிகமோ?

ஆனால்
நம் தாயின் மடியில்........
ஒன்றரை வயது வரை
நான் பால் அருந்தினேன்

உன்னோடு
மூன்று பிறப்பு உறிஞ்சிய
அவள் மடியில் பால் வர மறுத்ததும்
கடித்தேன் அவள் மடியை
துடித்தாள் தாயவள்
பால் வரவில்லை என்று
அவள் நமக்கு அன்னை என்பதால்.

அதே சினத்தை
உன்னிடம் கொண்டேன்
சினுங்கினேன்
முரண்பட்டேன்
உன் மடியில் சாய்ந்தேன்

எனக்கு அந்த அன்பு
உன்னிடம் கிடைக்கவில்லை
நான் மலரத்துடிக்கும் மொட்டம்மா
உன் வார்த்தைகளால்
நுனியிலே என்னை எரித்து விடாதே!

இப்போதல்லாம் என் மனம் அடிக்கடி
சஞ்சலம் கொள்கிறது
காரணம் கேட்டால்
சொல்லத் தெரியவில்லையம்மா.


http://www.thamilworld.com/forum/index.php?showtopic=3926

2 Comments:

Blogger றெனிநிமல் said...

தடுமாற்றம் உள்ள வயதும் நிக்கின்றீர்கள் போலும்! இங்கே தான் உங்கள் வாழ்க்கையின் அத்திவாரம் இடப்படுகின்றது என்பதினை மறந்து விடாதீர்கள்.

8:41 PM  
Blogger சிந்து said...

நன்றி றெனிநிமல்

11:02 PM  

Post a Comment

<< Home