Saturday, January 21, 2006

நீயும் நானும்.




பட்டாம் பூச்சியாய்
பருவமகள் இதயம் அது
பட படக்க……….
பார்த்த விழியிரண்டும் பூத்திருக்க
பசுமையான நினைவளைகளை சுமந்து
தன் பந்தங்களை மறந்து
பாசத்திற்குரிய புதிய உறவை
பார்த்திட காத்திருக்கின்றாள்

வானம் விரிந்து கிடக்கிறது
பூமி பரந்து கிடக்கிறது
காற்று கட்டி அணைக்கிறது
வா..... என்னருகில்
பற்றுடன் பழகிய
அவ்வுறவு
பரிதவிக்க விட்டிடுமா இன்று

பந்தமாய் தன்னுறவில் சேர்ந்திட
பாதி வலி மறைந்திட
மீதி வழியினைத் தேட
தன் துணையைத் தேடிட
வாழ்விற்கு அணைகட்டிட
முனைப்புடன் ஈடுபட்ட உள்ளம்
முறிந்து போக விரும்புமா ?

முத்தங்களால் பூஜித்த
முறை உறவு அது
முறிந்து போகாது
நாணம் நிறைந்த உன்
இதயப் போர்வையை கழற்றி விடு !
என் இறுக்கமான அரவணைப்புக்குள் கலந்து விடு
எமக்குள் பல்லாயிரம் நட்சத்திரங்களில்
வெளிச்சம் உண்டு !

எமக்குள் பிரமாண்டமான
சூரியனின் வெப்பமும்
எரிமலையின் கொதிப்பும்
பௌர்ணமி கடலின்
ஈர்ப்பும் உண்டல்லவோ
எல்லாவற்றையும் ஒன்றுவிடாமல்
நீயும் நானும்
பரிமாறுவோம்
வந்து விடு………….


2 Comments:

Blogger சிந்து said...

நன்றி senthu உங்கள் வருகைக்கு.

5:25 PM  
Blogger சிந்து said...

நன்றி மறைக்காடன்.

10:26 AM  

Post a Comment

<< Home