Tuesday, January 10, 2006

சொந்த மண்



தளிர்நடை பயின்று
தவழ்ந்து வந்த தரைக்கு
எந்தத் தங்கமும் நிகராகுமா?

அன்புத் தாய்
அருளாட்சி புரியும்
அரியவூராய்
பொலிகை மண்ணல்லோ
சொந்த இடமாம்
பொலிவுற்ற இடமதில்

பொன்னாக வளர்ந்தோம்
பொறுமையற்ற குணத்தால்
பொசுங்கிப் போனோம் இன்று

மண்ணுடன் உறவாடி
மடிதனில்
உட்கார முடியாது
வேகுகின்றோம் இப்போது

கடலோடி
மீன் தேடும்
மீனவர் கூட்டம்.....

மரம் ஏறி
வாழ்க்கைத் தரம் உயரும்
தொழிலாளிகள்......

சவரம் செய்து
வரம் பெறும்
தொழிலாளிகள்.....

மேளம் அடித்து
வளம் பெறும்
தொழிலாளிகள்.....

இன்னும்
எத்தனை....? எத்தனை...?

நம் சொந்த மண்
எதற்கும் ஈடாகாது............

3 Comments:

Anonymous Anonymous said...

நன்றாக இருக்கிறது
சிந்து..!!

9:48 PM  
Blogger றெனிநிமல் said...

நன்றி சிந்து.

7:32 PM  
Blogger சிந்து said...

நன்றி நித்தியா,றெனிநிமல்

11:30 AM  

Post a Comment

<< Home