Sunday, January 15, 2006

பத்திரிகை.



காரிருள் அகத்தில் நல்ல
கதிரொளி நீதான் -இந்த
பாரில் துயில்வோர்
கண்ணில் பாய்ந்திடும்
எழுச்சியும் நீ தான்!

ஊர்களைக் காட்டி - இந்த
உலகினை ஒன்று சேர்க்கப்
பிறந்திட்ட ஆசான் நீ!

மனிதர்களின் இதய ஓடையில்
ஆழநீர் ஊற்றாக
உன்னை நீ காட்டி
மக்கள் எண்ணம் செழித்திட
நீராக நீ வந்தாய்!

குறுகிய செயல்களை ஒன்று சேர்த்து
குல விளக்காய் ஒளிர செய்கிறாய்!

போர் முகில் விலக்கி செல்ல
போர்க்களம் செல்லும்
தூதுவர் போல்
உன் மக்கள் மனம் காண
நீ வந்தாய்!

படித்தவர்கள் எல்லாம்
உன்னிடம் தஞ்சம் புகுத்த
நீ வந்தாய்!

வானில் நிகழும் கோடி மாயங்கள்
மானிலத்தில் நடக்கும் சம்பவங்கள்
அத்தனையும் திரட்டி
உண்மை நிறைந்த சேதிகளை
தித்திப்பாய்த் தர
நித்தமும் நீ வந்தாய்!

சிறுகதைகள் சொல்லி
பெருமையூட்டும் அறிவுஜீவியே
அறைதனில் நடக்கும்
அகச் செயலைகளை
அம்பலத்திற்கு ஏற்றி
கயவர்கள் முகத்திரையை
கிழித்தெரிவதில்
உனக்கு நிகர் தான் யார்?

கலை உலகிலே
ஊக்கம் செய்வாய்
ஓவியம் தருவாய்
சிற்பம் உணர்விப்பாய்
கவிதை தருவாய்
காவியம் தருவாய்
கலகலவென சிரிக்கும்
விகடம் சொல்வாய்

நீயின்றி ஓர் அணு கூட
அசையாது இவ்வுலகில்
என்பதில் தான்
எத்தனை உண்மை

2 Comments:

Blogger றெனிநிமல் said...

பத்திரிக்கைக்கு கவி எழுதுவோர் பலர் உண்டு. உன்னைப் போல் சிலர் விதிவிளக்கு.

6:45 PM  
Blogger சிந்து said...

நன்றி றெனிநிமல்

11:30 AM  

Post a Comment

<< Home