இதயம்
என் இதயத் துடிப்புஉன்னை இம்சைபடுத்தியதோஎன்னவோநரம்புகளை இழுத்துமுகம் மறைத்துக்கொண்டதுஇதயம்
தவிப்பு
இரு விழிகளுக்கிடையே
என் இதயம் திருடிய
உன் தோற்றம்
நீ என்னை விட்டு
தொலைவில் இருக்கும்
ஒவ்வொரு நொடியும் நான்
இழந்து விடுகிறேன்
என்னை
காதல்
என் விழிகள் பார்த்ததுஎத்தனை- ஆனால்அதில் இனம் காட்டியதுஉன்னைத்தானே!உதடுகள் இருந்தும்மொழிகள் இருந்தும்என் மேல்காதல் கொண்டதுஉன் கண்கள் தானே!
கண்ணீர்
நான் சொட்டும் கண்ணீரில் கூட உன் கனவுகள் கரைந்துவிடக்கூடாதுஎன்பதட்காகவேஎன் அழுகைநிறுத்தியவள்
சுவாசம்
ஒரு சுவாசம்என்னையும் உன்னுள்சிறைப்படுத்தி வைத்திருக்கும்சுவாசம்அது நீதானே
நினைத்துப் பார்த்ததுண்டு
அன்பு திடீரென்று வருவதில்லைஆசை எப்போதும்அழிவதில்லைஉள்ளம் பிரிவைஏற்பதில்லைஇன்பத்தில் துன்பம்தெரிவதில்லைவானவில் மண்ணைதொட்டதில்லைவட திசைதென் திசையைநெருங்கவில்லைஎன்உயிர் எப்பொழுதும்உன்னை விட்டு பிரிவதில்லை
காத்திருப்பு
நீ என்னை நேசிக்கும்வரை
நான் உன்னை நேசிப்பேன்
உன் பாதசுவட்டில்
நான் கால் பதிப்பேன்
நீ என் காதலனானால்.
நீ என் வேர்வைத்துளியிலே
நீராடி
என் சேலைதலைப்பிலே
நீர் துவட்டி
என் தேகசூட்டிலே நான்
உன்னை உறங்கவைப்பேன்
நீ என் காதலானானால்
நீ என் குழந்தையாவும்
நான் உன் குழந்தையாவும்
என் மடியில் நீ உறங்க
உன் மடியில் நான் உறங்க
இருவர் சுவாசமும் ஒன்றுணைந்து
ராகம் ஒன்று நான் தொடுப்பேன்
நீ என் காதலனானால்