Tuesday, June 27, 2006

பெண்


காணல் நீரினை
கடல் நீரென நம்பி
முத்தெடுக்க புறப்பட்ட மங்கையே
காணல் நீரால்
உன் வாழ்வை
பாலைவனமாக்காதே!

Sunday, June 11, 2006

கனவு



கனவோடு விழித்தேன்
கண் முன்னே காதலன்

சீ போடா

தினமும் நீ தானே
என் முன்னே

சிற்பம் செதுக்கியவன்




சிதறியது சிற்பம்
சின்னாபின்னமானது
சிற்பியின் மனம்

Saturday, June 10, 2006

மது சொல்கிறது



நான் இப்போது
சுகத்தை கொடுப்பேன்
பின்னர்
சோகத்தையும்
கொடுப்பேன்!

பண்பட்ட உள்ளம்



குன்றிலிட்ட தீபம்
குறுகுவதில்லை
மலர்ந்த மலர்
வாசம் குன்றுவதில்லை - அதுபோல
பண்பட்ட உள்ளம்
என்றும் பட்டுப்போவதில்லை!

பாலியல் வன்முறை



எவனோ ஒருவன்
தன்னுடைய கூட்டிற்குள்
பலவந்தமாக அடக்கிவிட்டான்
என்பதற்காக - பெண்ணே நீ
சிறகொடிந்து விடாதே!

Wednesday, June 07, 2006

மனிதா



வெறும் மரமாக மட்டும் நின்று விடாதே
பிறருக்கு நிழலாகவும் நின்று கொள்
சுமையாக மட்டும் வாழ்ந்து விடாதே
சுமை தாங்கியாகவும் வாழ கற்றுக்கொள்.

உழைப்பு



இரத்தம் சிந்தி
நித்தம் வியர்வை தனை வடித்து
வித்திடும் உழவரே
எம் நிலத்தின் உயிர்கள்.

Tuesday, June 06, 2006

கடிவாளம்



காவல்
காக்கும் நாயகன்
கடிவாளம் ஏந்தி
கைப்பற்ற வரும்
நாள் எதுவோ?

அடக்கம்



குயிலின் குரல்
மயிலின் ஆடல்
இவைகள் போல்
பெண்ணின் அடக்கம்
அற்புத சக்தி கொண்டது
.

அன்பு



நீ
பறவைகளை
நேசிப்பது நிஜமெனில்
அதை சுதந்திரமாகப்
பறக்கவிடு

உன்னில்
அன்பிருந்தால்
அது நிச்சயம்
உன்னிடம்
திரும்பி வரும்....

அன்புக்குரியவன்




நான்
முதல் முதல்
கண்ட ஓளியும் நீ தான்
இறுதிவரை
இருட்டிலே சிறை
வைத்த ஒளியும் நீ தான்!!

இறப்பு




மரணங்களை
மனிதர் அடித்து
விரட்டுவதால் தான்
மரணங்கள்
மனிதர்களைத் தேடுகின்றது!

மரணம்



வாழ்வில்
களைத்த போது
இயற்கை
அளிக்கும் ஓய்வு!

பெண்




மேடு பள்ளம்
கொண்ட
புதையல்
பூமி!