பெண்
காணல் நீரினைகடல் நீரென நம்பிமுத்தெடுக்க புறப்பட்ட மங்கையேகாணல் நீரால்உன் வாழ்வைபாலைவனமாக்காதே!
கனவு
கனவோடு விழித்தேன்
கண் முன்னே காதலன்
சீ போடா
தினமும் நீ தானே
என் முன்னே
சிற்பம் செதுக்கியவன்
சிதறியது சிற்பம்
சின்னாபின்னமானது
சிற்பியின் மனம்
மது சொல்கிறது
நான் இப்போது
சுகத்தை கொடுப்பேன்
பின்னர்
சோகத்தையும்
கொடுப்பேன்!
பண்பட்ட உள்ளம்
குன்றிலிட்ட தீபம்
குறுகுவதில்லை
மலர்ந்த மலர்
வாசம் குன்றுவதில்லை - அதுபோல
பண்பட்ட உள்ளம்
என்றும் பட்டுப்போவதில்லை!
பாலியல் வன்முறை
எவனோ ஒருவன்
தன்னுடைய கூட்டிற்குள்
பலவந்தமாக அடக்கிவிட்டான்
என்பதற்காக - பெண்ணே நீ
சிறகொடிந்து விடாதே!
மனிதா
வெறும் மரமாக மட்டும் நின்று விடாதே
பிறருக்கு நிழலாகவும் நின்று கொள்
சுமையாக மட்டும் வாழ்ந்து விடாதே
சுமை தாங்கியாகவும் வாழ கற்றுக்கொள்.
உழைப்பு
இரத்தம் சிந்தி
நித்தம் வியர்வை தனை வடித்து
வித்திடும் உழவரே
எம் நிலத்தின் உயிர்கள்.
கடிவாளம்
காவல்
காக்கும் நாயகன்
கடிவாளம் ஏந்தி
கைப்பற்ற வரும்
நாள் எதுவோ?
அடக்கம்
குயிலின் குரல்
மயிலின் ஆடல்
இவைகள் போல்
பெண்ணின் அடக்கம்
அற்புத சக்தி கொண்டது.
அன்பு
நீ
பறவைகளை
நேசிப்பது நிஜமெனில்
அதை சுதந்திரமாகப்
பறக்கவிடு
உன்னில்
அன்பிருந்தால்
அது நிச்சயம்
உன்னிடம்
திரும்பி வரும்....
அன்புக்குரியவன்
நான்
முதல் முதல்
கண்ட ஓளியும் நீ தான்
இறுதிவரை
இருட்டிலே சிறை
வைத்த ஒளியும் நீ தான்!!
இறப்பு
மரணங்களை
மனிதர் அடித்து
விரட்டுவதால் தான்
மரணங்கள்
மனிதர்களைத் தேடுகின்றது!
மரணம்
வாழ்வில்
களைத்த போது
இயற்கை
அளிக்கும் ஓய்வு!
பெண்
மேடு பள்ளம்
கொண்ட
புதையல்
பூமி!