Monday, September 18, 2006

கற்பனையில் ஓர் கனவு




ஏப்போதும் போல்
நேற்றிரவு உன்
கனவுக்காகத்
தூங்கியபடி
காத்திருந்தேன்

ஆனால்
நீ வருவதட்கு முன்
எப்படியோ என்
கனவுக்குள
நுழைந்து விட்ட கடவுள்
மகனே உனக்கு
என்ன வரம் வேண்டும்
என்றார்

எனக்கோ
கோபம் தலைக்கேறி
யார் நீ
உன்னை யார்
என் கனவுக்குள்
அனுமதித்தது

உன்னிடம் இருந்து
எனக்கு எதுவும்
வேண்டாம்
எனக்கு என்ன வேண்டும்
என்பதை
என்னைக் கேட்காமல்
எனக்கு வாரி
வழங்குகிற தேவைதை
ஒருத்தி இருக்கிறாள்

நீ வெளியே போ
என்னவள் வருகிற
நேரமிது
எனச் சொல்லி விட்டேன்

உடனே
கடவுளுக்கு கோபம் வந்து
என்னை எரிக்கப்பார்த்தார்

உன் அரவணைப்பில்
இருக்கும் என்னை
எரித்து விட முடியுமா
அவரால்?

தன் வரலாற்றில்
ஏற்பட்ட முதல்
தோல்வியை
மறக்க முடியாமல்
முகம் வியர்க்க
மறைந்து விட்டார்
கடவுள்.

ஆனாலும்
இந்தக் கடவுளுக்கு
கர்வம் அதிகம்

எல்லோருக்கும் எல்லாமும்
நாம் தான் என்கிற
நினைப்போடு
சுற்றிக்கொண்டு இருக்கிறார்

அவர் பிறருக்கு வேண்டுமானால்
எல்லாமுமாக இருந்து விட்டு
போகட்டும்
ஆனால் எனக்கு
எல்லாமே நீதானே!

இந்த கடவுள் உன்னிடம்
வந்தால் அவரைக்
கொஞ்சம் கண்டித்து வை

என்னவருக்கு என்ன வேண்டும்
என்பதை நான்
பார்த்துக்கொள்கிறேன்
இனி அவரை
தொந்தரவு செய்யாதே என்று.

தெய்வமே
உன்னை
என் இதயத்திலிருந்து
வெளியேற்றி விட்டு
ஒரு பெண்ணைக்
குடி வைத்ததற்காக
கோபித்துக் கொள்ளாதே

உன்னால்
தூணிலோ துரும்பிலோ
வாசம் செய்ய முடியும்
ஆனால் இவளால்?