Monday, August 14, 2006

கனவு........



என் இமைக்குள்

கனவாய் நுழைந்தாய்

துயிலும் நேரத்தில்
நிலவாய் ஒளி தந்தாய்

அந்தி மாலை
சிட்டோடு சிறகு விரிக்க

தேன்சிந்து பூவோடு
முத்தமிட வந்தாய்

அலைபாயும் நேரம்
இசையோடு வந்தாய்

சாந்தமாய் வந்தாய்
சங்கடத்தை தந்தாய்

சொந்தம் என்று வந்தாய்
சோகத்தை தந்தாய்

எல்லாமாய் வந்தாய்
சொல்லாமல் போனாய்...?

பூக்கள் பேசியது
வண்டுதான் அறிந்தது

நான் பேசியது நீ
அறிந்தாயா....?