Tuesday, February 28, 2006
Tuesday, February 21, 2006
தமிழனின் அகதி வாழ்க்கை.

தமிழன் அகதியாய் வந்து
அவதியில் வாழ்கிறான்
தூரதேசம் சஞ்சரிக்கும்
பறவை ஒன்று
தன் தாய்நாடு
திரும்பும் நிலைதான்....
ஒவ்வொரு
தாய்நில தமிழனின்
வெளிநாட்டு வருகையும்
மடிகின்ற மரங்கள் எல்லாம்
மனக் கவலையுடன் இறப்பதில்லை
ஆனால்......
தமிழனாகிய நம்முடய நிலை?
தமிழன் எப்போது நிலையாகுவது?
எட்டு திசையிலும்
திக்கு திக்காக
வாழ்கின்ற தமிழன்
எப்போது ஒன்று கூடுவது?
காலம் பதில் சொல்லுமா?
காலத்திற்காக
காத்திருந்தது போதும் தமிழா!
விழித்திடு! எழுந்திடு!
காலத்தின் கையில் நாம் இல்லை
நம்முடைய கையில்தான்
காலம் உள்ளது.
எழுந்திடு தமிழா
வெற்றி நடை போட
எழுந்திடு.
Friday, February 17, 2006
Tuesday, February 14, 2006
காதலர் தினம்

எங்கு பிறந்தோம்
எங்கு வழந்தோம்
அறியாமல் காதலுக்காய்
ஓரிடம் சேர்ந்தோம்
சாதி மதம்
பேதம் இன்றி
மனம் விட்டு
பேசி மகிழ்ந்தோம்
அன்று
நம் காதல்
புனிதமானதாகவும்
உண்மையானதாகவும்
ஒளி வீசியது
அன்று
வலன்ரை பாதிரியா
இரு ஜீவனுக்காய்
தன்னை அர்ப்பனித்தார்
அன்று சங்கமித்ததாம்
காதலர் தினம்
இன்று
உன் திருமணத்திற்காய்
என்
காதலும்
மௌனத்திலே
மரணம் ஆகியது ஏன்??
இது என்ன தினம்??
Sunday, February 12, 2006
கனவுகளின் கனவுகள்.

இருவரும்
காதல் மொழி பேசியது
ஆறாண்டு
நினைவுகள்
ஆயிரம் ஆயிரம் ஆசைகள்
அதுமட்டுமா?
உன்
நினைவுகளோடு
என் இரவு
உன்
தொலைபேசியின் அலறலோடு
என் விடியல்
உன்
எண்ணங்களின் சிந்தனையோடு
என் பகல்
உன்
கற்பனைகளின் ரசனைகளோடு
என் உணர்வு
உன்
பெயர் உச்சரித்தபடியே
என் மொழி அன்று
நீ
என்னை விட்டு
விலகியதிலிருந்து
இன்று
நான் உன்னை
மறக்கவும் இல்லை
உனக்கு
என் நிலை
விளங்கவும் இல்லை
என்னால்
உனக்கு புரியவைக்கவும்
முடிய வில்லை
ஆனால் ஒன்று........
என்
மரணம் வரை
உன்
நினைவு தொடரும்...........
நினைவுகளோடு
சிந்து.....
Tuesday, February 07, 2006
என் காதலன்
எனக்குள்ளும் காதல்
வந்தது
புரியா வயதில்
கொஞ்சும் மொழி
பேசிய போது
என்
கண்ணில் மலர்ந்தது
அன்று நீ
என் கை கோர்த்த போது
முளைத்த சந்தோசத்தில்
மனதார பேசி
மனங்கொண்டு பேசி
மனசுக்கு இனிமை காட்டி
மனப்பூட்டு பூட்டி
மனதை தடவி
மனதை மூடி
மனசார உன் கரம் நீட்டினாய்
ஆண் மகனாய்
ஆதவனாய்
ஆண் நீ
ஆசையாய் வளர்க்கப்பட்டாய்
ஆதரவாய் எனக்கு
எனக்காக படைத்த உன்
தாயிடம் தவறாமல் கூறு
தவப் புதல்வனை
தக்க சமயம்
பாரில் தவளவிட்டமைக்கு.
உன் இதயத்தை
எனக்காக
உரு மாற்றி தந்தாய்
என் கனவுகளின்
அர்த்தத்தை
புரிய வைத்தாய்
என்னோடு நீ
இருக்கும் வரை
வானம் கூட என்
கை வசம் தான்
உன்
சுவாசத்தில் தான்
என் இறுதி மரணமும்.
நேசமுடன்
சிந்து........
வந்தது
புரியா வயதில்
கொஞ்சும் மொழி
பேசிய போது
என்
கண்ணில் மலர்ந்தது
அன்று நீ
என் கை கோர்த்த போது
முளைத்த சந்தோசத்தில்
மனதார பேசி
மனங்கொண்டு பேசி
மனசுக்கு இனிமை காட்டி
மனப்பூட்டு பூட்டி
மனதை தடவி
மனதை மூடி
மனசார உன் கரம் நீட்டினாய்
ஆண் மகனாய்
ஆதவனாய்
ஆண் நீ
ஆசையாய் வளர்க்கப்பட்டாய்
ஆதரவாய் எனக்கு
எனக்காக படைத்த உன்
தாயிடம் தவறாமல் கூறு
தவப் புதல்வனை
தக்க சமயம்
பாரில் தவளவிட்டமைக்கு.
உன் இதயத்தை
எனக்காக
உரு மாற்றி தந்தாய்
என் கனவுகளின்
அர்த்தத்தை
புரிய வைத்தாய்
என்னோடு நீ
இருக்கும் வரை
வானம் கூட என்
கை வசம் தான்
உன்
சுவாசத்தில் தான்
என் இறுதி மரணமும்.
நேசமுடன்
சிந்து........